சீருடைப் பணியாளர் பணிக்கு நாளை எழுத்துத் தேர்வு: சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெற உள்ளதால் கரூர் பேருந்து

கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (மே 21) நடைபெற உள்ளதால் கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து தேர்வு மையத்திற்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டிகே. ராஜசேகரன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர் போன்ற பணிகளுக்கான எழுத்துத்தேர்வுகள் கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி, கொங்கு பள்ளி, எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரி ஆகிய இடங்களில் மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது.
எனவே தேர்வு மையத்திற்குச் செல்ல கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து காலை 7 மணி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதனை தேர்வர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com