புலியூரில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த நச்சலூர் மேட்டுக்குளத்தைச் சேர்ந்தவர் பூச்சி நாயக்கர். இவரது மகன் பிச்சை முத்து(29). இவர், புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலியூர் செட்டிநாடு சிமென்ட் ஆலை அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து டிராக்டர் ஓட்டுநர் வீரராக்கியத்தைச் சேர்ந்த சிவ பிரகாஷ்(32) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.