இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதல்: இளைஞர் சாவு

புலியூரில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.

புலியூரில் இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த நச்சலூர் மேட்டுக்குளத்தைச் சேர்ந்தவர் பூச்சி நாயக்கர். இவரது மகன் பிச்சை முத்து(29). இவர், புதன்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் புலியூர் செட்டிநாடு சிமென்ட் ஆலை அருகே சென்றுகொண்டிருந்த போது, எதிரே வந்த டிராக்டர் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
பசுபதிபாளையம் போலீஸார் வழக்குப்பதிந்து டிராக்டர் ஓட்டுநர் வீரராக்கியத்தைச் சேர்ந்த சிவ பிரகாஷ்(32) என்பவரைக் கைது செய்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com