கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி யில் அண்மையில் பெய்த மழையில் சேதமடைந்த அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவரை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வடகிழக்குப் பருவமழையின் காரணமாக பள்ளப்பட்டியில் கடந்த வாரத்தில் பெய்த மழையின் போது அரசு மருத்துவமனையின் சுற்றுச்சுவர் அடியோடு இடிந்து விழுந்துள்ளது. இதனால், பள்ளப்பட்டி குடியிருப்புப் பகுதிகளிலிருந்து நங்காஞ்சி ஆற்றை நோக்கிச் செல்லும் கழிவுநீர் மருத்துவமனை வளாகத்துக்குள் செல்கிறது.
ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில் கழிவுநீர் தேங்கிக் காணப்படுவதால் சுகாதார சீர்கேடுகளும் நிகழ்கின்றன. இரவு நேரங்களில் பன்றிகள் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிகின்றன. நோய்கள்பரவும் முன்னரே சுற்றுச்சுவர் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளப்பட்டி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.