விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் இதுவரை 12, 621 பேர் பயனடைந்துள்ளதாக ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் தமிழக அரசின் ஏழைகளுக்கான விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 12, 621 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் 50,484 ஆடுகள் வழங்கப்பட்டு, இதுவரை 97,196 குட்டிகளை ஈன்றுள்ளன. நடப்பு நிதியாண்டில் 2,929 பயனாளிகளுக்கு 4 ஆடுகள் வீதம் 11,716 ஆடுகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார்.