கரூர் மாவட்டம், க. பரமத்தி ஒன்றிய எலவனூர் நடுநிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது.
விழாவிற்கு கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் முருகன் த லை மை வகித்தார். க.பரமத்தி வட்டார வள மைய பயிற்றுநர் சுகந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட அளவில் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருதை க. பரமத்தி உதவி தொடக்க கல்வி அலுவலர் செந்தில்குமார் பள்ளி ஆசிரியர் சுகுமாரிடம் வழங்கினார். இதில், 13 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.