கரூரில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர் சங்கத்தின்(ஏஐடியுசி) கரூர் மண்டலம் சார்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா ஆர்எம்எஸ் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல துணைத் தலைவர் பி. ஹரீந்திரன் தலைமை வகித்தார். இதில், மாநில சம்மேளன பொதுச் செயலாளர் ஜே.லட்சுமணன், இந்திய கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலாளர் கேகே.பெரியசாமி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் ஷேசன், கரூர் மண்டலத் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை உடனடியாக உருவாக்க வேண்டும், அரவக்குறிச்சியில் இடமாற்றம் செய்யப்பட்ட இரு தொழிலாளர்களின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. இதில் கரூர் மண்டல பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில சம்மேளன உறுப்பினர் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.