சத்துணவு மைய அமைப்பாளரிடம் விலையில்லா மிக்ஸி வழங்கல்

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு அரசின் விலையில்லா மிக்ஸி வழங்கும்

கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அரசு பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களுக்கு அரசின் விலையில்லா மிக்ஸி வழங்கும் நிகழ்ச்சி தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தாந்தோணி ஊராட்சி ஒன்றிய ஆணையர் பெ. கனகராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சிக்கு ஊராட்சிகள் உதவி இயக்குநர் கே.எஸ்.ராஜ்மோகன் தலைமை வகித்து தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தாந்தோணிமலை, ஆண்டாங்கோயில் கிழக்கு, மேற்கு, காந்திகிராமம் உள்ளிட்ட 113 சத்துணவு மையங்களின் அமைப்பாளர்களிடம் தமிழக அரசின் விலையில்லா மிக்ஸிகள் வழங்கினார். நிகழ்ச்சியில் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்கள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com