கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் குழந்தைகள் தின விழா செவ்வாய்க்கிழமை கரூர் சரஸ்வதி உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது.
விழாவுக்கு நடராஜா வள்ளியப்பன், நேரு படத்துக்கு மாலை அணிவித்தார். மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கச் செயலாளர் மனோகரன் வரவேற்றார். தலைவர் மேலை.பழநியப்பன் நேருவின் சிறப்புகள் குறித்து பள்ளிக்குழந்தைகளிடம் எடுத்துரைத்தார்.
விழாவில் கார்த்திகேயன், பாலமுருகன் ஆகியோர் குழந்தைகளுக்கு இனிப்பு மற்றும் பேனா, பென்சில், திருக்குறள் புத்தகங்களை வழங்கினர். இதில், லயன்ஸ் சங்க பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி தலைமை ஆசிரியை சரஸ்வதி நன்றி கூறினார்.