அதிமுக தொண்டர் குடும்பத்துக்கு நிதியுதவி

கரூர் மாவட்டம், நெய்தலூர் அருகே  மாரடைப்பால் உயிரிழந்த அதிமுக தொண்டரின் குடும்பத்துக்கு அதிமுக அம்மா அணியின் மாவட்டச் செயலர் வி.செந்தில்பாலாஜி நிதியுதவி வழங்கினார்.

கரூர் மாவட்டம், நெய்தலூர் அருகே  மாரடைப்பால் உயிரிழந்த அதிமுக தொண்டரின் குடும்பத்துக்கு அதிமுக அம்மா அணியின் மாவட்டச் செயலர் வி.செந்தில்பாலாஜி நிதியுதவி வழங்கினார்.
நெய்தலூர் ஊராட்சி,  கோட்டைமேட்டைச் சேர்ந்தவர் நடராஜன்(58). அதிமுக தொண்டரான இவர்,  போயஸ்கார்டனில் வருமானவரித் துறையினர் அண்மையில் சோதனை நடத்தியது கண்டு அதிர்ச்சியடைந்து, மாரடைப்பால் உயிரிழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த அதிமுக அம்மா அணியின் கரூர் மாவட்டச் செயலர் வி. செந்தில்பாலாஜி,   நடராஜன் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவியையும் அளித்தார். கட்சி நிர்வாகிகள் சந்திரசேகர், கோயம்பள்ளி பாஸ்கரன், தியாகராஜன் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com