கரூர் மாவட்டம், மாயனூர் காவிரியாற்றில் மிதந்த முதியவர் சடலத்தை போலீஸார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மாயனூர் காவிரியாற்றில் படித்துறை பகுதியில் 70 வயது முதியவர் சடலமாக மிதந்தார். இதுகுறித்து மாயனூர் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் மாயனூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இறந்தவர் யார், அவர்எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.