இனாம் கரூர் கிளை நூலகத்தில் உலக குழந்தைகள் தின உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் பெரியகுளத்துப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று பொது நூலகத்தின் உணவுகளை வீணாக்க மாட்டோம், தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துவோம், மின்சாரத்தை சேமிப்போம், குப்பைகளை குப்பைத் தொட்டியில் மட்டுமே போடுவோம், நூலகத்தை தொடர்ந்து பயன்படுத்துவோம் என உறுதிமொழியேற்றனர்.
நிகழ்ச்சியில் பள்ளித்தலைமை ஆசிரியை எஸ்.விஜயா, பட்டதாரி ஆசிரியர்கள் ஜெ.பத்மாவதி, எஸ்.வளர்மதி மற்றும் நூலக வாசகர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை நூலகர் ம.மோகனசுந்தரம் செய்திருந்தார்.