மானிய விலையில் வலை பெற மீனவர்கள் விண்ணப்பிக்கலாம்

உள்நாட்டு மீனவர்களுக்கு 50 % மானிய விலையில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் வழங்கப்பட  உள்ளது.

உள்நாட்டு மீனவர்களுக்கு 50 % மானிய விலையில் வலை மற்றும் கண்ணாடி நாரிழை பரிசல்கள் வழங்கப்பட  உள்ளது.
இதுகுறித்து மாவட்ட  ஆட்சியர் கு. கோவிந்தராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 சட்டப்பேரவையில் நிகழாண்டுக்கான மீன்வளத்துறை மானியக் கோரிக்கையில் உள்நாட்டு மீனவர்கள் மீன்பிடி வலைகள் மற்றும் கண்ணாடி நாரிழையிலான பரிசல்கள் வாங்க 50%  மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இத்திட்டத்தின் கீழ் வலை, பரிசல் பெற விருப்பமுள்ள உள்நாட்டு மீனவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெறப்படும் விண்ணப்பங்கள் முன்னுரிமை அடிப்படையில் பரிசீலனை செய்யப்படும். மேலும் விவரங்களுக்கு திருச்சி   மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை 0431- 2421173 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com