கரூரில் ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
தலைவர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். செயலாளர் ராமசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 10 ஆண்டுக்கு குறைவாக பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும்.
7-வது ஊதியக்குழுவின் அறிக்கையை விரைந்து அமல்படுத்த தமிழக அரசை கேட்டுக்கொள்வது, குடும்பப் பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல குடும்ப ஓய்வூதியர்களுக்கு மருத்துவப் படியை ரூ.1000 என உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் திரளாகப் பங்கேற்றனர். பொதுச் செயலர் ஜி.சிவசங்கரன் வரவேற்றார்.