பரமத்தி ஒன்றியம் தென்னிலை அருகே விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர் புதன்கிழமை காலை இறந்தார்.
க.பரமத்தி ஒன்றியம், தென்னிலை தெற்கு ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரிவலசைச் சேர்ந்தவர் செல்லமுத்து மகன் ரிதீஸ் (14) .அப்பகுதியிலுள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்த இவர் கடந்த 28-ம் தேதி காலை க.பரமத்தியிலிருந்து தென்னிலைக்கு மொபெட்டில் வந்தபோது தென்னிலை பெட்ரோல் பங்க் அருகே கரூர் நோக்கி வந்த கார் மோதி படுகாயமடைந்தார்.
இதையடுத்து கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். தென்னிலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.