கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டத்தில் வெள்ளிக்கிழமை(அக். 6) மற்றும் வரும் 13, 20, 27-ஆம் தேதிகளில் அம்மா திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: வருவாய்த்துறை சார்பில் அம்மா திட்டமுகாம் அரவக்குறிச்சி வட்டத்தில் வெள்ளிக்கிழமை மற்றும் வரும் 13, 20, 27-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை சின்னதாராபுரம் குறுவட்டத்திற்குட்பட்ட தும்பிவாடி கிராம சேவை மைய கட்டடத்திலும், 13-ஆம் தேதி பள்ளபட்டி குறுவட்டத்திற்குட்பட்ட அம்மாபட்டி அங்கன்வாடி மைய கட்டடத்திலும், 20-ஆம் தேதி கூடலூர் கீழ்பாகம் அணைப்புதூர் கிராம சேவை மைய கட்டடத்திலும், 27-ஆம் தேதி சேந்தமங்கலம் குரும்பப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் நடைபெற உள்ளது. முகாம் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் தலைமையில் நடைபெற உள்ளதால் பொதுமக்கள் தங்களின் கோரிக்கையை மனுக்களாக தெரிவித்து பயன்பெறலாம்.