கோம்புபாளையம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மண்டலத் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் தலைமை வகித்தார். இதில் 2017-18-ம் ஆண்டுக்கான 2-ம் கட்ட விலையில்லா வெள்ளாடுகள் வழங்குவதற்காக 34 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் கூட்டுறவு வங்கித்தலைவர் ரங்கநாதன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், கால்நடை மருந்தக உதவியாளர் மாலதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் திரளாக பங்கேற்றனர். ஊராட்சி செயலர் அனிதா வரவேற்றார்.