பள்ளபட்டியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு ஆலோசனைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெ. அஸ்லம் பாஷா தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் பேங்க் சுப்ரமணியம், ஓதுகூடம் பீர்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூர் மாவட்ட சிறுபான்மை பிரிவு பொறுப்பாளர் டோனி அறிமுக உரையாற்றினார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சின்னசாமி, மாநிலச் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி, தாராபுரம் முருகானந்தம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட, நகர, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கரூர் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் அன்னம்பாரிஜக்காரியா வரவேற்றார்.