ரேஷன் கடை பூட்டை உடைத்து  6 மூட்டை சர்க்கரை திருட்டு

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ரேஷன் கடை பூட்டை உடைத்து 6 சர்க்கரை மூட்டைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ரேஷன் கடை பூட்டை உடைத்து 6 சர்க்கரை மூட்டைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரவக்குறிச்சி அருகேயுள்ள தெத்துப்பட்டியில் உள்ள ரேஷன் கடையை கடந்த 3-ம் தேதி விற்பனையாளர் அன்புமணி (54)  பூட்டிச் சென்றார். பின்னர் கடந்த 7-ம் தேதி திறக்கச் சென்றபோது  பூட்டு உடைக்கப்பட்டு கடையினுள் இருந்த தலா 50 கிலோ எடைகொண்ட 6 சர்க்கரை மூட்டைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.  இதன் மதிப்பு ரூ.4,050 .  இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் விற்பனையாளர் அன்புமணி புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com