கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே ரேஷன் கடை பூட்டை உடைத்து 6 சர்க்கரை மூட்டைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரவக்குறிச்சி அருகேயுள்ள தெத்துப்பட்டியில் உள்ள ரேஷன் கடையை கடந்த 3-ம் தேதி விற்பனையாளர் அன்புமணி (54) பூட்டிச் சென்றார். பின்னர் கடந்த 7-ம் தேதி திறக்கச் சென்றபோது பூட்டு உடைக்கப்பட்டு கடையினுள் இருந்த தலா 50 கிலோ எடைகொண்ட 6 சர்க்கரை மூட்டைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.4,050 . இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸில் விற்பனையாளர் அன்புமணி புதன்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸார் விசாரிக்கின்றனர்.