தோகைமலை அருகே கத்தியால் குத்தி பெண் கொலை: கூலித் தொழிலாளி கைது

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சனிக்கிழமை இரவு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற கூலித்தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே சனிக்கிழமை இரவு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்ற கூலித்தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.
தோகைமலையை அடுத்த காவல்காரன்பட்டியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (35). நாகராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து, விஜயலட்சுமி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், இவரது உறவினர் திருச்சி மாவட்டம் , இனாம்புலியூரைச் சேர்ந்த அய்யர் என்ற சின்னவழியன் (50) என்பவருக்கும், விஜயலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, சின்னவழியன் விஜயலட்சுமி மீது சந்தேகப்பட்டு அவ்வப்போது சண்டைபோடுவாராம்.
இந்நிலையில், சனிக்கிழமை இரவு காவல்காரன்பட்டிக்கு வந்த சின்னவழியன் விஜயலட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சின்னவழியன் கத்தியால் விஜயலட்சுமியின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீஸார் அங்கு சென்று சின்னவழியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com