அண்ணா சிலைக்கு கட்சியினர் மரியாதை

பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் வெங்கமேட்டில் உள்ள அவரது சிலைக்கும், எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை

பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூரில் மாவட்ட அதிமுக சார்பில் வெங்கமேட்டில் உள்ள அவரது சிலைக்கும், எம்ஜிஆர் சிலைக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலர் பசுவை சிவசாமி, கரூர் ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ். திருவிகா, இளைஞரணி செயலர் விசிகே. ஜெயராஜ், நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், எம்ஜிஆர் மன்ற இணைச் செயலர் எம். செல்வராஜ், ஒன்றியச் செயலர்கள் கமலக்கண்ணன், பி. மார்க்கண்டேயன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பின்னர் கட்சிக் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பேரவைச் செயலர் காமராஜ், நகர இளைஞரணிச் செயலர் சேரன் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல திமுக சார்பில் கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்டச் செயலர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் பூவை ரமேஷ்பாபு, ஒன்றியச் செயலர்கள் ரகுநாதன், கந்தசாமி, நகரச் செயலர் எஸ்.பி. கனகராஜ் உள்ளிட்ட திமுகவினர் திரளாகப் பங்கேற்றனர். திக சார்பில் பேருந்து நிலைய ரவுண்டானாவில் உள்ள அண்ணா சிலைக்கு மாவட்டத் தலைவர் குமாரசாமி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாநில வழக்குரைஞர் அணி துணைத் தலைவர் மு.க. ராஜசேகரன், மாவட்டச் செயலர் காளிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோல எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை சார்பில் மாவட்ட பொறுப்பாளர் விகே. துரைசாமி தலைமையில் அக்கட்சியினர் பேருந்து நிலைய ரவுண்டானாவில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஒன்றிய பொறுப்பாளர்கள் ஏ. பாலசுப்ரமணி, எஸ். பழனிசாமி, சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com