கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் திருட்டு

கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கரூரில் வீட்டின் பூட்டை உடைத்து 26 பவுன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கரூர் தெற்குமடாவிளாகம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் (42). இவர் கடந்த 9-ம் தேதி திருச்சியில் உறவினர் இறந்ததையடுத்து, ஈம நிகழ்ச்சியில் பங்கேற்க குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிச் சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 26 பவுன் நகையை யாரோ மர்மநபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.புகாரின்பேரில் கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com