நீட் தேர்வு ரத்து கோரி உண்ணாவிரதம்

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் முற்போக்கு கழகம் சார்பில் கரூரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாணவர் முற்போக்கு கழகம் சார்பில் கரூரில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
கரூர் தலைமை தபால் நிலையம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாணவர் முற்போக்கு கழக மாவட்ட அமைப்பாளர் தீபக்குமார் தலைமை வகித்தார்.
விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலர் வழக்குரைஞர் பெ. ஜெயராமன், செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டப் பொருளாளர் சதீஷ் என்கிற நிலவன், கரூர் நாடாளுமன்ற தொகுதிச் செயலர் துரைசெந்தில் உள்ளிட்டோர், மாணவர் முற்போக்கு கழகத்தினர் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com