வேப்பம்பாளையம், தாந்தோணிமலையில் செப்.19-இல் மின் தடை

வேப்பம்பாளையம் மற்றும் தாந்தோணிமலை பகுதியில் வரும் 19-ம் தேதி மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.

வேப்பம்பாளையம் மற்றும் தாந்தோணிமலை பகுதியில் வரும் 19-ம் தேதி மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக கரூர் மின் விநியோக வட்ட செயற்பொறியாளர் கு. சிவக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் கோட்டத்திற்குட்பட்ட வேப்பம்பாளையம் மற்றும் தாந்தோணிமலை துணை மின் நிலையங்களில் வரும் 19-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம்பாளையம், கோதூர், வடிவேல்நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம்பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளிலும், தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஏமூர், மின்நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவபட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம் ஆகிய பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com