மணவாடியில்  வீடு புகுந்து நகை திருடியவர் கைது

மணவாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

மணவாடியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், மணவாடி பெருமாள்பட்டி காலனியைச் சேர்ந்தவர் சக்திவேல். கடந்த 10-ம் தேதி இவர் தனது குடும்பத்தினருடன் கரூர் ஜவஹர்பஜாருக்குச் சென்றபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த ஒன்னரை பவுன் நகையை  திருடிச் சென்றனர். இதுதொடர்பான புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸார் வழக்குப்பதிந்து மர்ம நபரை தேடி வந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை சக்திவேல் வீட்டில் நகை திருடியதாக தாந்தோணிமலை தென்றல் நகரைச் சேர்ந்த விஜயராஜ் மகன் ரத்தினகிரீஸ்வரன் (24) என்பவரை போலீஸார் கைது செய்து, அவரிடம் இருந்த நகையையும் பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com