கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்திற்கு வெள்ளிக்கிழமை மாலை காங்கிரஸ் கட்சியினருடன், பாஜகவினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரத் தலைவர் ஆர். ஸ்டீபன்பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலர் சுரேகாபாலச்சந்தர் மற்றும் பாஜக மாவட்டச் செயலர் முருகானந்தம், நகரத் தலைவர் செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.