வாஜ்பாய் மறைவு: பாஜக மௌன ஊர்வலம்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து கரூரில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து மௌன ஊர்வலம் நடத்தினர்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையடுத்து கரூரில் பாஜகவினர் வெள்ளிக்கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து மௌன ஊர்வலம் நடத்தினர்.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் தொடங்கிய ஊர்வலத்திற்கு மாவட்டச் செயலர் முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் கோட்ட பொறுப்பாளர் சிவசாமி, பொதுச் செயலர்கள் நகுலன், கைலாசம், முருகானந்தம், கிருஷ்ணமூர்த்தி, 
நகரத் தலைவர் செல்வன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.  
ஊர்வலம் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து ஜவஹர்பஜார், பழைய சேலம் பைபாஸ் சாலை வழியாக லைட்ஹவுஸ்கார்னரை அடைந்தது. மாவட்டச் செயலர் மோகன், இளைஞரணி செயலர் சிவம்சக்திவேல் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர். முன்னதாக பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் வைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் படத்திற்கு மாலை அணிவித்து மௌன அஞ்சலி செலுத்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com