கரூர் வேம்பு மாரியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மனுக்கு ரூபாய்களால் தனலட்சுமி அலங்காரம் நடைபெற்றது.
கரூர் வேம்பு மாரியம்மனுக்கு ஆடிமாதம் கடைசி வெள்ளியில் தனலட்சுமி அலங்காரம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் ஆடி மாத கடைசி வெள்ளியின்போது திமுக தலைவர் கருணாநிதிக்காக ஒரு வாரம் துக்க நிகழ்ச்சி அனுஷ்டிக்கப்பட்டதால் கோயிலில் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படவில்லை. இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் ரூ. 5,10, 20, 50, 500, 2000 நோட்டுகளால் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.