அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தல்: பா.ஜ.க. ஆலோசனைக் கூட்டம்

கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய

கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலுக்காக மேற்கொள்ள வேண்டிய  பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் பி.டி. அரசகுமார் கூட்டத்தில் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில்,  உலகின் பல்வேறு பகுதிகளில் இந்தியர்கள் தைரியமாக வாழ்கிறோம் எனக் கூறுகிறார்கள் என்றால், மோடி இருக்கிறார் என்ற தைரியம்தான்.  வெளிநாட்டவர்கள்  இந்தியரைத் தொட்டுப்பார்க்க அச்சப்படுவதற்கு காரணமும் மோடி மேல் உள்ள பயம்தான் என்றார்.   
கூட்டத்துக்கு மாவட்டத்தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். அரவக்குறிச்சி சட்டமன்ற பொறுப்பாளர் பிரபு முன்னிலை வகித்தார். கரூர் மக்களவைத் தொகுதி அமைப்பாளர் சிவசாமி, பொறுப்பாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில் மாவட்டப் பொருளாளர் குணசேகர், பொதுச்செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, கைலாசம், மாவட்டச் செயலர்கள் மோகன், பரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிறைவில் மாநில இளைஞரணிச் செயலர்  கோபிநாத் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com