மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக நகர் நகர் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளில் டிசம்பர்11 ( செவ்வாய்க்கிழமை) மின் விநியோகம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் கரூர் கோட்டச் செயற்பொறியாளர் எஸ்.செந்தாமரை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் டிசம்பர் 11 ஆம் தேதி மேற்கொள்ளப்பட உள்ளன.
இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் காமராஜபுரம், கே.வி.பி.நகர், செங்குந்தபுரம், பெரியார்நகர், ஜவகர்பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்திநகர், ரத்தினம்சாலை, கோவைசாலை, வடிவேல்நகர், ராமானுஜம்நகர், திருக்காம்புலியூர், ஆண்டான்கோவில்ரோடு, செல்லாண்டிபாளையம், சுக்காலியூர், சேலம்-புறவழிச்சாலை, ஆண்டாங்கோவில் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.