முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் ரங்கசாமி.

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் ரங்கசாமி.
முன்னாள் அமைச்சரும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்டச் செயலருமான வி.செந்தில்பாலாஜி அக்கட்சியிலிருந்து விலகி, திமுகவில் சேர உள்ளதாக  செய்திகள் வெளியான நிலையில்,  கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த ரங்கசாமி, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் மேலும் கூறியது:
எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை, சிக்கலும் இல்லை. முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எந்தக் கட்சிக்கும் செல்லவில்லை.  மற்றவர்கள் கூறி வருவதுபோல, வேறுமாதிரி எந்த சப்ஜெட்டும்  இல்லை. செந்தில்பாலாஜி கட்சிப் பணியில் தீவிரமாக இருப்பதால் அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. வெளியில் உள்ளவர்கள் ஏதாவது கூறுவார்கள்.
கரூரில் தங்கியிருந்ததாக நீங்கள் (செய்தியாளர்கள்) கூறும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள்  செந்தில்பாலாஜியை அடிக்கடி சந்தித்து வருவது சகஜம். அதற்காகத்தான் வந்து சென்றுள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெட்ஷீட் வாங்க  கரூர் வந்தேன். இதற்கான ஏற்பாட்டை செந்தில்பாலாஜிதான் செய்திருந்தார் என்றார் ரங்கசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com