நாடு முன்னேறியிருப்பது  காங்கிரஸால்தான்

நாடு முன்னேறியிருப்பது காங்கிரஸ் கட்சியால்தான் என்றார் நடிகையும்,  அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.

நாடு முன்னேறியிருப்பது காங்கிரஸ் கட்சியால்தான் என்றார் நடிகையும்,  அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு.
இதுகுறித்து கரூரில் செவ்வாய்க்கிழமை  அவர் அளித்த பேட்டி:
திமுக, காங்கிரஸ் கூட்டணி நன்றாக உள்ளது. பிரதமர் மோடி நிறைய விஷயங்கள் சொல்வார், ஆனால் எதையும் செய்ய மாட்டார்.  இந்தியா பல்வேறு மதம், ஜாதிகள் கொண்ட நாடு. ஆனால் பாஜக  நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே நாடு என்ற கொள்கையோடு செயல்படுகிறது. இந்தக் கட்சி தேவையா என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும்.   பஸ் கட்டண உயர்வால்  தமிழக மக்கள் அவதிப்படுகிறார்கள்.  தோல்வி பயத்தில்தான் உள்ளாட்சித் தேர்தலை அதிமுக அரசு சந்திக்கத் தயங்குகிறது.ஜிஎஸ்டியால் கரூரில் கொசுவலை, ஜவுளி உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
 தமிழகத்துக்கு எதுவும் செய்ய மாட்டோம். ஆனால் அங்கு காலூன்றுவோம் என பாஜக கூறுவது எப்படி சாத்தியம்?.  ஜிஎஸ்டி, பணமதிப்பு இழப்பு கொள்கையால் எல்லையில் தீவிரவாதம் இருக்காது என்றார் மோடி. ஆனால் எல்லையில் எத்தனையோ ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம். 
60 ஆண்டுகளில் இந்தியா டிஜிட்டல்மயமாகவும், தொழில் ரீதியாகவும் முன்னேறியிருக்கிறது என்றால் அது காங்கிரஸால்தான், பாஜகவால் அல்ல. அமித்ஷா பக்கோடா விற்பது நல்ல தொழில் எனக் கூறியிருக்கிறார்.  முதலில்  அத்தொழிலை அவர் தனது மகனுக்கு சொல்லிக்கொடுக்கட்டும் என்றார் குஷ்பு.  மாநில செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி,  கரூர் மாவட்டத் தலைவர் சின்னசாமி,  நகரத் தலைவர் ஆர். ஸ்டீபன்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com