தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு பள்ளபட்டி இந்தியன் வங்கி சார்பாக சமத்துவப் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்தியன் வங்கி மேலாளர் சேகர் தலைமை வகித்தார்.
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் பகுதியான பள்ளபட்டியில் முஸ்லிம் மற்றும் கிருஸ்துவ சகோதர்களை அழைத்து மத நல்லிணக்கம் பேணும் விதமாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
முன்னாள் கரூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் அக்பர் அலி, பள்ளபட்டி மேல்நிலைப் பள்ளித் தாளாளர் கஜனாபர் அலி, கிரசன்ட் பள்ளி முதல்வர் சாகுல் ஹமீது, கரூர் மாவட்ட மருந்து வணிகர் சங்கத் தலைவர் பாப்புலர் அபுதாஹீர், பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளைத் தலைவர் பெரியசாமி, தலைமை தபால் நிலைய தலைமை அலுவலர் ஜெகதீசன், வங்கி துணை மேலாளர் கௌதம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.