கரூர் தென்னிலை அருள் முருகன் பொறியியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கல்லூரியின் நிறுவனர் தலைவர் சந்திரசேகர் தலைமை வகித்தார். கல்வி நிறுவனத் தாளாளர் கந்தசாமி வாழ்த்தினார். விழாவில் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அறிவியல் ப டைப்புகளை காட்சிக்கு வைத்திருந்தனர். இதில் சிறப்பான படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு அந்த மாணவர்களுக்கு 2018-ம் ஆண்டுக்கான இளம் விஞ்ஞானி விருதுகளை சிறப்பு விருந்தினரான பெல்ஜியத்தை சேர்ந்த ரோட்டரியின் அலெக்ஸ் பயூஸ் மற்றும் ஈரோடு ரோட்டரி கிளப் தலைவர் சண்முகசுந்தரம் ஆகியோர் வழங்கினர். ஏற்பாடுக ளை கல்லூரி பேராசிரியர்கள் செய்தனர். முதல்வர் சண்முகம் வரவேற்றார்.