கரூர்
வன உயிரினங்களை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் சிறை
வன உயிரினங்களை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கரூர் மாவட்ட வன அலுவலர்.
வன உயிரினங்களை வேட்டையாடினால் 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் கரூர் மாவட்ட வன அலுவலர்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொங்கலை முன்னிட்டு கரூர் மாவட்டத்தில் பாரி வேட்டை என்ற பெயரில் வன உயிரினங்களான முயல், கீரிப்பிள்ளை, குள்ளநரி, அணில், உடும்பு மற்றும் பிற வன உயிரினங்களை சிலர் வேட்டையாடுகிறார்கள் எனத் தெரியவந்துள்ளது.
அவ்வாறு வேட்டையாடுவது இந்திய வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி குற்றம். இந்த குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.25,000 அபராதம் வசூலிக்கப்படும்.
யாராவது வேட்டையாடுவது குறித்து தெரியவந்தால் உடனே 94434-96218, 98421-26651 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.