எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கரூர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சனிக்கிழமை தொடங்கியது.
கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் போட்டிகளை கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ எம். கீதாமணிவண்ணன் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். மாவட்ட அவைத் தலைவர் ஏ.ஆர். காளியப்பன், முன்னாள் கரூர் ஒன்றியக் குழுத் தலைவர் எஸ். திருவிகா, நகரச் செயலர் வை. நெடுஞ்செழியன், ஒன்றியச் செயலர் இன்ஜினியர் கமலக்கண்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் கரூர் நகர்மன்றத் தலைவர் தமிழ்நாடு எம். செல்வராஜ்,பொதுக்குழு உறுப்பினர் மல்லிகாசுப்ராயன், நகர இளைஞரணிச் செயலர் சேரன்பழனிசாமி, மாணவரணிச் செயலர் தானேஷ் என்கிற முத்துக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. வரும் 18-ம்தேதி வரை நடைபெற இப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு பரிசாக ரூ. 20,000, 2-ம் பரிசாக ரூ.15,000, 3-ம் பரிசாக ரூ.10,000 வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை அதிமுக மாவட்டச் செயலரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் செய்துள்ளார்.