ஜன. 15,26,31-களில் மதுக்கடைகள் மூடல்

கரூர் மாவட்டத்தில் வரும் 15, 26-31-ம்தேதிகளில் அரசு மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் வரும் 15, 26-31-ம்தேதிகளில் அரசு மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் என மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் வரும் 15-ம் தேதி (திங்கட்கிழமை) "திருவள்ளுவர் தினத்தை'' முன்னிட்டும், 26-ம் தேதி (வெள்ளிக்கிழமை) குடியரசு தினம்" மற்றும் 31-ம் தேதி (புதன்கிழமை) "வள்ளலார் நினைவு நாள்'' ஆகிய 3 நாட்களிலும் அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல்கள், கிளப்புகள் ஆகியவற்றில் மதுபானம் மற்றும் பீர் வகை விற்பனை முடக்கப்படுகிறது.
விதிகளை மீறி விற்போர் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் விதிகள் 2003-ன் படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com