வருவாய்த் துறையினரின் பொங்கல் கொண்டாட்டம்

கரூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் தைப்பொங்கல் திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் தைப்பொங்கல் திருவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
கரூர் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் கு. கோவிந்தராஜ் பொங்கலிட்டு, போட்டிகளை தொடக்கி வைத்து பரிசு வழங்கினார். பின்னர் அவர் கூறுகையில், வீரமும் விவேகமும் நிறைந்த நம் மண்ணில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நன்னாளை சிறப்பாகக் கொண்டாடும் இந்த நல்ல தருணத்தில் அரசுப் பணியாளர்களுக்கு புத்தாண்டு, பொங்கல் நல் வாழ்த்து தெரிவிப்பதாகக் கூறினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ச. சூர்ய பிரகாஷ், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி துணையாட்சியர் ஜான்சிராணி, வருவாய்க் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி (கரூர்), மாவட்ட விளையாட்டு அலுவலர் சாந்தி, அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com