தென்னிலையில் நாளை மக்கள் தொடர்பு முகாம்

தென்னிலையில்  மக்கள் தொடர்பு முகாம் வியாழக்கிழமை (ஜூன் 21) நடைபெற உள்ளது.

தென்னிலையில்  மக்கள் தொடர்பு முகாம் வியாழக்கிழமை (ஜூன் 21) நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டம், தென்னிலை கீழ்பாகம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் நிர்வாக காரணங்களால் வியாழக்கிழமை நடைபெறுகிறது.  முகாமில், பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு துறை தொடர்பாக அளிக்கப்படும் நலத்திட்ட உதவிகள் குறித்து எடுத்துரைக்க உள்ளனர்.  மேலும், மருத்துவ முகாம், அரசுக் கண்காட்சி நடைபெற உள்ளன. எனவே, தென்னிலை கீழ்பாகம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனடைய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com