புலியூர், வேப்பம்பாளையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் புதன்கிழமை (ஜூன் 20) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து கரூர் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் கு.சிவக்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புலியூர், வேப்பம்பாளையம் துணைமின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி, நரிகட்டியூர், தொழிற்பேட்டை, ஆர்.என்.பேட்டை, மணவாசி, சாலப்பட்டி, பாலராஜபுரம், உப்பிடமங்கலம், லட்சுமணம்பட்டி, பொரணி வடக்கு, சஞ்சய்நகர், வேலுசாமிபுரம், அரிக்காரம் பாளையம், கோதூர், வடிவேல்நகர்,
கோவிந்தம்பாளையம், ஆண்டான்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சக்கொட்டாம் பாளையம், சத்திரம், பவித்திரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.