கரூரில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தலைமைப்பண்பு பயிற்சி கரூர் கோட்டை மேடு உயர்நிலைப்பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
இதில், கருத்தாளர்களாக வை. குழந்தையரசு, பெ. பழனிசாமி, செல்வராணி, சாரதா ஆகியோர் பங்கேற்று வழிநடத்திக்கொள்வது, கற்பித்தல், கற்றல் முறைகளை உருமாற்றுவது, குழுக்களை ஏற்படுத்தி வழி நடத்துவது, புதுமை காணலை வழிநடத்துவது, பங்குதாரர்களின் பங்களிப்பு ஆகிய தலைப்புகளில் பயிற்சியளித்தனர்.
இம்முகாமில் கரூர், தாந்தோணி ஒன்றியங்களைச் சேர்ந்த 51 தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.