கரூரில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோவை ஜவுளி மண்டல அலுவலகம் மற்றும் கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, அன்னை மகளிர் கல்லூரி சார்பில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் கரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு மைய வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமை, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலரும், மாவட்ட நீதிபதியுமான ஆர்.தங்கவேல் துவக்கி வைத்தும், வளாகத்தில் மரக்கன்று நட்டு வளாகத்தில் தூய்மைப் பணியை துவக்கி வைத்தும் பேசினார்.
இதில், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர் கே.கே.சொக்கலிங்கம், கோவை ஜவுளி மண்டல தொழில்நுட்ப அதிகாரி எம்.லோகேஷ் மற்றும் அன்னை மகளிர் கல்லூரியின் மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.