பைக்  - அரசுப் பேருந்து  மோதல்: இளைஞர் சாவு

கரூர் பசுபதிபாளையம் அருணாசல நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் முத்துக்குமார்(23). இவர், அதே பகுதியைச் சேர்ந்த  தனது நண்பர் காளிமுத்து (23)

கரூர் பசுபதிபாளையம் அருணாசல நகரைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் முத்துக்குமார்(23). இவர், அதே பகுதியைச் சேர்ந்த  தனது நண்பர் காளிமுத்து (23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு கரூர் - ஈரோடு சாலையில் ஆத்தூர் பிரிவு பகுதியில் சென்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. 
இதில், பலத்த காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே முத்துக்குமார் இறந்தார்.
காளிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். 
இதுகுறித்து கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து அரசுப் பேருந்து ஓட்டுநர் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த  முருகன்(40) என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com