கரூர் வெங்கமேட்டில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வட்ட வழங்கல் அலுவலர் முகமது சுயைபு தலைமை வகித்தார். இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, புதிய ரேஷன் கார்டு, ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 50-க்கும் மேற்பட்ட மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
இதில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளுக்கான ஆணையை சமூக பாதுகாப்புத்திட்ட தனி வட்டாட்சியர்(பொ) செந்தில் பயனாளிகளுக்கு வழங்கினார். முகாமில் வருவாய் ஆய்வாளர் சிவராஜ், இனாம்கரூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துப்பிரியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.