கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வேலம்பாடி பாப்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் முருகேசன்(42). இவர் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் மின்சாரம் தடைப்பட்டதால் மின் இணைப்பு கொடுக்க எலக்ட்ரிக் பெட்டியை திறந்தபோது திடீரென அவரை மின்சாரம் தாக்கியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.