போட்டித் தேர்வுக்கான வழிகாட்டி கருத்தரங்கம்

கரூரில் மதுரை புறவழிச்சாலையில் உள்ள வள்ளுவர் அரங்கில்  டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

கரூரில் மதுரை புறவழிச்சாலையில் உள்ள வள்ளுவர் அரங்கில்  டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுக்கான வழிகாட்டி கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கிற்கு கரூர் வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரியின் தாளாளர் க.செங்குட்டுவன் தலைமை வகித்தார். 
இதில் கல்வியாளர் கே. கோபிநாத் பங்கேற்று, வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள குரூப்-2 தேர்வில் வெற்றி பெறுவது எப்படி, தேர்வுக்கு எவ்வாறு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும், தேர்வுக்கான பாடங்களையும், வினாக்களையும் எப்படி தேர்வு செய்வது, எந்தெந்த பணிகளுக்கு குரூப் தேர்வுகள் எழுதித் தேர்வாக முடியும் போன்றவை குறித்து விளக்கமளித்துப் பேசினார். நிகழ்ச்சியில் குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com