கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே மண்ணெண்ணெய் அடுப்பு வெடித்து சேலையில் தீப்பிடித்து இளம்பெண் உயிரிழந்தார்.
லாலாப்பேட்டை அடுத்த வெங்கம்பட்டியைச் சேர்ந்த மருதை மகள் நித்யா(18). இவர் திண்டுக்கல் மாவட்டம் பாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் போனதால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெங்கம்பட்டிக்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்தபோது, திடீரென அடுப்பு வெடித்து அவரது சேலையில் தீப்பற்றியது. இதில், உடல் கருகிய நிலையில் அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.