கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் நவராத்திரி உத்ஸவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூர் மேட்டுத்தெருவில் உள்ள இக் கோயிலில் நவராத்திரி உத்ஸவ விழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது. 10 ஆம்-தேதி அன்று ராமாவதாரத்திலும், 11-ஆம் தேதி வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்திலும், 12-ஆம் தேதி வாமனாவதாரத்திலும், 13-ஆம் தேதி வேணுகோபால கிருஷ்ணன் என ஒவ்வொரு அவதாரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செவ்வாய்க்கிழமை காளிங்கநர்த்தனம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். முன்னதாக அபயபிரதான ரெங்கநாத சுவாமிக்கு காலையில் திருமஞ்சனமும், இரவில் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.