அபயபிரதான ரெங்கநாத சுவாமி கோயிலில் நவராத்திரி உற்சவம்

கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் நவராத்திரி உத்ஸவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

கரூர் அபயபிரதான ரெங்கநாதசுவாமி கோயிலில் நவராத்திரி உத்ஸவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 
கரூர் மேட்டுத்தெருவில் உள்ள இக் கோயிலில் நவராத்திரி உத்ஸவ விழா கடந்த 10-ம் தேதி தொடங்கியது. 10 ஆம்-தேதி அன்று ராமாவதாரத்திலும், 11-ஆம் தேதி வெண்ணைத்தாழி கிருஷ்ணன் அலங்காரத்திலும், 12-ஆம் தேதி வாமனாவதாரத்திலும், 13-ஆம் தேதி வேணுகோபால கிருஷ்ணன் என ஒவ்வொரு அவதாரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செவ்வாய்க்கிழமை காளிங்கநர்த்தனம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். முன்னதாக அபயபிரதான ரெங்கநாத சுவாமிக்கு காலையில் திருமஞ்சனமும், இரவில் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com