சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 219-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டுக் கழகத்தினர் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கரூர் பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜர் சிலை முன் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு பண்பாட்டுக் கழகத்தின் மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் மாலை அணிக்கப்பட்டது. முன்னதாக கரூர் வட்டாட்சியரகம் முதல் பேருந்து நிலைய ரவுண்டானா வரை ஒயிலாட்டம் ஆடியவாறு வந்து மாலை அணிவித்தனர். திரளானோர் பங்கேற்றனர்.