குளித்தலை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை பேருந்து நிறுத்தம் அருகே செயல்படும் வட்ட வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கு கடந்த அக்.10-ல் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.
இதில் 11 பேர் இயக்குநர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக மாவட்ட அதிமுக பொருளாளர் கண்ணதாசன், துணைத் தலைவராக பொன். மதியழகன் உள்ளிட்ட 11 பேர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
இதையடுத்து அண்மையில் நடந்த புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் தேர்தல் அலுவலர் குபேந்திரன், குளித்தலை நகர அதிமுக செயலர் சோமுரவி, ஒன்றியச் செயலர் விநாயகம் முன்னிலையில் பதவியேற்றனர். புதிய நிர்வாகிகளுக்கு சங்க அலுவலர்கள், பணியாளர்கள், கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.