டிஎன்பிஎல் சார்பில்மாவட்ட கால்பந்து போட்டி தொடக்கம்

டிஎன்பிஎல் ஆலை சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது.


டிஎன்பிஎல் ஆலை சார்பில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் சனிக்கிழமை தொடங்கியது.
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் சமுதாய நலப்பணி
திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டிகள் ஆலை குடியிருப்பு வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் இப்போட்டியில் வேலாயுதம்பாளையைம், தாந்தோணிமலை, பள்ளபட்டி, கரூர், புகழூர், காகிதபுரம், ஓனவாக்கல்மேடு, தளவாபாளையம், புலியூர், மற்றும் நாணப்பரப்பு ஆகிய ஊர்களைச் சார்ந்த பள்ளி, கல்லூரியைச் சார்ந்த மற்றும் பிற கால்பந்து குழுக்களைச் சேர்ந்த 23 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர்.
போட்டியை ஆலையின் முதன்மை நிர்வாகிகள் தொடக்கி வைத்தனர். பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com